Wednesday, June 16, 2010

இயற்கையை பாதுகாப்போம்

பருவ மழை பருவம் தவறியும் பெய்வதில்லை

பருவ காற்று பருவமறிந்து வீசுவதில்லை

எக்காலமும் அக்காலத்தின் பயன் தருவதில்லை

எந்நிலமும் இயற்கையாய் விளைவதில்லை


நீர், நிலம், காற்று, வான் என இவ்வுலகை காக்க இயற்கை படைத்த படைப்பல்லாம் மனிதனின் தவறான வாழ்க்கை முறையால் தன் நிலை மாறி இவ்வுலகை அழிக்க தயாராகிக் கொண்டுள்ளது.



தாயைப் பழித்தாலும் நீரை பழிக்காதே என்பார்கள். ஆனால் பூமியின் உள்மட்ட நீர்நிலையும் வற்றி, ஜீவநதிகள் எல்லாம் சாயநதிகளாகி புதிது புதிதாய் தோன்றும் நோய்களுக்கல்லாம் நீரின் மேல் பழி போடும் சூழல் உருவாகிவிட்டது.


கைப்பிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள், சிலந்தி, தவளை, தட்டான், குளவி, பறவைகள் என சங்கீத மேடையாக இருந்த விவசாய நிலங்கள் எல்லாம் இன்று மருந்துகளின் நாற்றத்துடன் நஞ்சாகிவிட்டது.


மனிதனின் வாழ்க்கைக்கு எல்லா சவுகரியங்களையும் தேடித்தந்த அறிவியலின் வளர்ச்சி அதன் கழிவை காற்றில் கலந்து வாயு மண்டலம் வரை விஷவாயுவாக மாற்றிவிட்டது.


நாகரிக நகரை உருவாக்க காடுகள் அழிக்கப்பட்டதால் வானும் பூமியும் வெப்பமயமாகி நம் வாழ்வை அழித்துவிடுமோ என்ற அச்சம் மனிதகுலத்தை இன்று தோற்றிக்கொண்டது.


புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயர்ந்து பேரழிவை விரைவில் ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளன.


நாம் எதிர் நோக்கியுள்ள பெரும் சவாலை இப்போதே உணர்வோம். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம்.


வாகன உபயோகத்தை குறைப்போம்.

ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்.

நீர்நிலைகளை பேணிக் காப்போம்.

சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்போம்.

மரங்கள் நிறைந்த பசுமையான இயற்கையை உருவாக்குவோம்.


மேட்டர் கொடுத்த நண்பருக்கு நன்றி..

Saturday, January 30, 2010

குழந்தைகளைப் பாதுகாப்போம்

குழந்தைகளைப் பாதுகாப்போம்

இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன.

ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.




தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே இந்தக் கருத்தரங்கத்தின் நோக்கம்.

மதுரைப் பதிவர்களின் ஏற்பாட்டில், மதுரையில் குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் மன நல மருத்துவர் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





நாள் : 31.01.2010 ஞாயிறு நேரம் : மாலை 3 மணி - 6 மணி

இடம் : செமினார் ஹால், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளவும்.





விபரங்களுக்கு......
தருமி - 9952116112
சீனா - 9840624293
பாலகுமார் - 9486102490
ஜெரி ஈஷானந்தா - 9791390002
ஸ்ரீதர் - 9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138

மின்னஞ்சல் தொடர்புக்கு.....

______________________________________________________________

சமூக நோக்கோடு இந்த கருத்தரங்கை நடத்தும் மதுரைப் பதிவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

மதுரைக்கு போகிறேன்

நாளை மதுரை பதிவர்கள் நடதும் குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரைக்கு போகிறேன்.

திரும்பிவந்து நிகழ்ச்சிகுறித்து பதிவு இடுகிறேன்....

( அப்ப்ப்பாட ஒரு பதிவு தட்டச்சு செய்வதற்கே தாவு தீர்ந்து போச்சு......)

சந்தைக்கு வாங்க

சந்தை இனிமே அடிக்கடி கூடுமுங்கோ...


எல்லோரும் வாங்கோ...


வாழ்த்துங்கோ...