Saturday, January 30, 2010

குழந்தைகளைப் பாதுகாப்போம்

குழந்தைகளைப் பாதுகாப்போம்

இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன.

ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.




தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே இந்தக் கருத்தரங்கத்தின் நோக்கம்.

மதுரைப் பதிவர்களின் ஏற்பாட்டில், மதுரையில் குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் மன நல மருத்துவர் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





நாள் : 31.01.2010 ஞாயிறு நேரம் : மாலை 3 மணி - 6 மணி

இடம் : செமினார் ஹால், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளவும்.





விபரங்களுக்கு......
தருமி - 9952116112
சீனா - 9840624293
பாலகுமார் - 9486102490
ஜெரி ஈஷானந்தா - 9791390002
ஸ்ரீதர் - 9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138

மின்னஞ்சல் தொடர்புக்கு.....

______________________________________________________________

சமூக நோக்கோடு இந்த கருத்தரங்கை நடத்தும் மதுரைப் பதிவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

3 comments:

தருமி said...

மதுரை போய்ட்டு வந்து விவரம் ஒண்ணும் சொல்லலையே ?

KARTHIK said...

// தருமி said...

மதுரை போய்ட்டு வந்து விவரம் ஒண்ணும் சொல்லலையே ? //

ரிப்பிட்டேய்..........

க.பாலாசி said...

ரைட்டு தலைவரே... (ரொம்ம்ம்ம்ப....லேட்டா வந்திட்டனோ...)

Post a Comment