குழந்தைகளைப் பாதுகாப்போம்
இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன.
ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மதுரைப் பதிவர்களின் ஏற்பாட்டில், மதுரையில் குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் மன நல மருத்துவர் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள் : 31.01.2010 ஞாயிறு நேரம் : மாலை 3 மணி - 6 மணி
இடம் : செமினார் ஹால், அமெரிக்கன் கல்லூரி, மதுரை
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளவும்.
விபரங்களுக்கு......
தருமி - 9952116112
சீனா - 9840624293
பாலகுமார் - 9486102490
ஜெரி ஈஷானந்தா - 9791390002
ஸ்ரீதர் - 9360688993கார்த்திகைப்பாண்டியன் -9842171138
மின்னஞ்சல் தொடர்புக்கு.....
______________________________________________________________
சமூக நோக்கோடு இந்த கருத்தரங்கை நடத்தும் மதுரைப் பதிவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
சமூக நோக்கோடு இந்த கருத்தரங்கை நடத்தும் மதுரைப் பதிவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
3 comments:
மதுரை போய்ட்டு வந்து விவரம் ஒண்ணும் சொல்லலையே ?
// தருமி said...
மதுரை போய்ட்டு வந்து விவரம் ஒண்ணும் சொல்லலையே ? //
ரிப்பிட்டேய்..........
ரைட்டு தலைவரே... (ரொம்ம்ம்ம்ப....லேட்டா வந்திட்டனோ...)
Post a Comment